Tag: #Odisha

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. அதாவது, வங்கதேசத்திற்கும் இந்தியாவின் கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே உள்ள வங்கக்கடல் நடுவில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் படி, காலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. […]

#Earthquake 3 Min Read
Earthquake - BayofBengal

திருப்பூரில் கொடூரம்! கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!

திருப்பூர் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்—முகமது நதீம் (24), முகமது டேனிஷ் (25), மற்றும் முகமது முர்ஷித் (19)—அவர்களை சந்தித்து, வேலை வாய்ப்பு […]

#Odisha 4 Min Read
CrimeAgainstWomen

ரோஹித் ஆட்டத்தை இடைநிறுத்திய ஒடிசா மைதானம்! கரண்ட் இல்லையா? காரணம் என்ன?

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டி மட்டும் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) ஒடிசா மாநிலம் கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் […]

#INDvENG 6 Min Read
IndVEng 2nd ODI - Cuttack stadium Odisha

5 மாநில ஆளுநர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மத்திய முன்னாள் இணை அமைச்சர் வி.கே.சிங், மிசோரம் ஆளுநராக நியமனம், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்துள்ளார். […]

#Bihar 3 Min Read
PresidentDroupadiMurmu

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி நாடாளுமன்ற வளாகத்தில் தவறி விழுந்துள்ளார். இவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. இந்த எதிர்பாரா சிறு விபத்து குறித்து அவர் ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அவர் ANI செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் நாடாளுமன்ற வளாகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது அருகில் ராகுல் காந்தி இருந்தார். ராகுல் காந்தி அருகில் இருந்த ஒரு எம்பியை […]

#BJP 3 Min Read
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi

ஒடிசாவில் 120 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று.. வேரோடு சாய்ந்த மரங்கள்! பாதிப்பு நிலவரம்..

ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா, தீவிர புயலாக நள்ளிரவில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கையில் மணிக்கு 100-110 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், ஒடிசா […]

#Cyclone 7 Min Read
Cyclone Dana damage

கரையை கடந்த டானா புயல்: முகாம்களில் பிறந்த 1,600 புதிய குழந்தைகள்!

ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில், நேற்று மாலைக்குள் 5.84 லட்சம் […]

#Cyclone 5 Min Read
baby borm odisha

கரையைக் கடந்தது டானா புயல்.. கொட்டிய மழை.. 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று!

ஒடிசா : வங்கக்கடலில் உருவான அந்த டானா புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. அதன்படி, வங்கக்கடலில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே […]

#Cyclone 4 Min Read
cyclone dana

டானா புயல்: 200 ரயில்கள் ரத்து, விமானங்கள் மற்றும் கப்பல் சேவை நிறுத்தம்!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே நாளை (25ம் தேதி) அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கரையை கடக்கும் பொழுது, காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இரு தினங்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், […]

#Odisha 4 Min Read
Cyclone Dana

டானா புயல் எதிரொலி : கொல்கத்தா விமானம் நிலையம் நாளை இயங்காது!

மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]

#Bengaluru 3 Min Read
Kolkata Airport

டானா புயல் எதிரொலி: இந்த மூன்று மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய  மூன்று […]

#Bengaluru 5 Min Read
rain school holiday

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, புயல் கரையை எப்போது கடக்கும் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எப்போது கரையை கடக்கும் இதனால் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் […]

#IMD 5 Min Read
Dana Cyclone Update

உருவாகிறது டானா புயல்! எச்சரிக்கை கொடுத்த இந்திய வானிலை மையம்!

ஒடிசா : வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வங்கக் கடலில் புதிய புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதாவது, வரும் 21-ஆம் தேதி வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. அதன்பிறகு, இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையை நோக்கி கரையைக் கடக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருந்ததாக முன்னதாக […]

#IMD 5 Min Read
CycloneDana

ஒடிசா கடற்கரையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

வானிலை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (19.07.2024) காலை 5.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுபெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரிசா மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவியது. வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 20 (இன்று) ஆம் தேதி இல் […]

#IMD 4 Min Read
tn rain

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த புதிய அப்டேட்.!

வானிலை ஆய்வு மையம் : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (18.07.2024) காலை 8.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டது. இன்று வங்கக்கடலில் நிலவிய அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது, வலுப்பெற் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய […]

#IMD 3 Min Read
Bay of Bengal

எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க.. ஒரே விமானத்தில் பயணித்த நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ்!

மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் டெல்லிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு […]

#BJP 3 Min Read
Default Image

24 ஆண்டுகள்., ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்.!

ஒடிசா: நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நிறைவு பெற்று முடிந்த நிலையில், இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று ஆட்சியை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. அடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, தனது […]

#BJP 3 Min Read
Default Image

ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆந்திரா, ஒடிசா.! முன்னிலையில் TDP, பாஜக.!

தேர்தல் முடிவுகள்: இந்தியா முழுக்க 543 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தல் முடிவு நிலவரங்கள் வெளியாகி வரும் சூழலில், ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. இதில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி 131 தொகுதிகள் வென்று தனி பெரும்பான்மையுடன் […]

#AndhraPradesh 3 Min Read
Default Image

ஆந்திராவில் தெலுங்கு தேசியம்.. ஒடிசாவில் பிஜேபி முன்னிலை !

சட்டமன்ற தேர்தல் : ஆந்திர பிரதேஷம் மற்றும் ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 116 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசிய கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மேலும், 2-வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே போல ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 58 தொகுதிகளிலும், […]

#BJP 2 Min Read
Default Image

சட்டமன்றத் தேர்தல்: ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில கள நிலவரம்.!

ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பாஜக தொடர் முன்னிலை ஒடிஷா சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தெலுங்கு தேசம் தொடர் முன்னிலை ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் […]

#Odisha 2 Min Read
Default Image