மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா.! சக வீரர்கள் தனிமை.!

Default Image

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததாக அத்திக்கரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையி பாதிக்கப்பட்டவர்களை கடற்படை தளத்தில் உள்ள மருத்துவமனையில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அந்த வீரர்களுடன் தங்கியிருந்த சக வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு கடற்படை தளத்தில் உள்ள குடியிருப்பு விடுதிகளில் மாலுமிகள் தங்கியிருந்தனர். ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே சென்று வந்து உள்ளனர். 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன் இந்திய ராணுவத்தினரில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிசிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah