ED கேட்டது 10 நாள்… கொடுத்தது 6 நாள்.! கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல் உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நேற்று அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய நபராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது என வாதிட்டது.
மேற்கண்ட காரணங்களை குறிப்பிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க 10 நாள் நீதிமன்ற காவல் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது. இதனை எதிர்த்து வாதிட்ட கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர், அரவிந்த் கேஜிரிவால் மீது அமலாக்கத்துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அமலாக்கத்துறை தன்னிச்சையாக முன்வந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும், இந்தியாவிலேயே முதன் முறையாக ஒரு முதலமைச்சரை இவ்வாறு கைது செய்துள்ளனர் என கெஜ்ரிவால் தரப்பு வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நிச்சயம் நீதிமன்ற காவல் விதிப்போம் என கூறிய நீதிபதி அமர்வு, பின்னர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28வரையில் 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து உத்தரவிட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025