டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த துறை மத்திய நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மீது ஊழல் குற்றசாட்டு எழுந்தால் சிபிஐ, பொருளாதார விசாரணை பிரிவினர் அந்த குற்றம் பற்றி விசாரணை மேற்கொள்வர். அமலாக்கத்துறையானது அந்த ஊழலில் நிகழ்ந்ததாக கூறப்படும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை மேற்கொள்ளும். இந்த அமலாக்கத்துறை (ED) சோதனை என்பது பரவலாக எதிர்க்கட்சி அரசியல் […]
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பாஜக சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், காவல்துறை தரப்பில் டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றே கூறப்பட்டது. இதனால் முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்ட பல்வேறு பாஜக மூத்த […]
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் டெண்டர் தொடர்பாக சுமார் ரூ.1000 கோடி வரையில் ஊழல் நடந்திருக்காலாம் என கூறப்பட்டது. இதனை குறிப்பிட்டு இன்று பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிருந்து இன்று சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பாஜக […]
சென்னை : நேற்று தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்தி திணிப்பு குறித்து எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தேன் கூட்டில் கல் எறிவது ஆபத்து. ஒரு மொழியை திணித்தால் அது பகையுணர்ச்சிக்கே இடம் கொடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோடைகாலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்துள்ளது. திருப்பத்தூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய 4 […]
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் திடீர் சோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் அமலாகாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி […]
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் அமலாக்கத்துறைனர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்ததாக கூறி ஒரு சில இடங்களில் […]
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவையில் உள்ள வீடுகள் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதேபோல, அசாம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது, விசிக துணை பொதுச்செயலாளரும், மார்ட்டின் மருமகனுமான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் இந்த சோதனை நேற்று மாலை வரை நடைபெற்றுள்ளது. இதனை குறிப்பிட்டு சிலர் இணையதளம் […]
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உறந்தைராயன் குடிக்காடு பகுதியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோதனை சென்னையிலும் தொடர்ந்து வருகிறது. கடந்த 2011 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை, ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வைத்தியலிங்கத்தின் மூத்த மகன் V.பிரபு மீதும் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதன்பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினார் செந்தில் பாலாஜி. அங்கு விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு , உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.25 லட்சத்திற்கு பிணை, ஆமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக நியமனம் செய்வபடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் […]
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
டெல்லி : உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். […]
டெல்லி : சட்டவிரோத பணப்பரிவர்த்தணை வழக்கு விசாரணையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக டெல்லி அமலாக்கத்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என ANI செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஒரு தனியார் நகைக்கடைக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், நகைக்கடைக்காரரின் மகனை விசாரணையில் இருந்து விடுவிக்க டெல்லி அமலாக்கத்துறை அதிகாரி முயற்சித்ததாக கூறப்படுகிறது. வழக்கில் இருந்து விடுவிக்க சுமார் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐக்கு கிடைத்த புகாரின் பெயரில் டெல்லி […]
அமீர் : போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இயக்குநர் அமீர் மறுப்பு தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்க துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் ஜாபர் சாதிக் உடன் நெருங்கி பழகிய இயக்குனர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்த விசாரணை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த போதைப்பொருள் வழக்கில் ஜாபர் […]
டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையினரிடம் பதில் இல்லை என்றால் நாளை பதிலுடன் வாருங்கள். – உச்சநீதிமன்றம். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் விசாரணை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை அடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது நடவடிக்கைகளின் போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அப்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை […]
சென்னை: கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்ட விசாரணை நடைபெற்று , தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று, பிற்பகல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார். இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, […]
டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறையின் இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை முன்னதாக நடைபெற்று வந்தத நிலையில் இன்று நடைபெற்ற […]