மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 11 பேர் உயிரிழப்பு.!

Default Image

மத்தியபிரதேசத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சந்தேகத்திற்கிடமான கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டார். இதனையடுத்து, கராகுவா, ஜீவஜிகஞ்ச் மற்றும் மகாகல் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் கீழ் வரும் பகுதிகளில் நேற்று முதல் பதினொரு பேர் விஷம் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் இறந்தனர் என்று உஜ்ஜைன் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இறந்தவர்கள் எதை உட்கொண்டார்கள், யார் விற்றார்கள் என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்