எம்மாடி வடிவேலா? தப்பி ஓடிய அஜித்…படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.!

Ajith - Vadivelu

Vadivelu: நடிகர் வடிவேலு உடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என அஜித் குமார் சொன்ன அதிர்ச்சி தகவலை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 20 வருடங்களுக்கு மேலாக ஆகியும் இன்று வரை வைகை புயல் வடிவேலு உடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் வடிவேலுவுடன் கடைசியாக ராஜா படத்தில் நடித்துள்ளார்.

கதைக்கு ஏற்றார் போல் வடிவேலு அஜித்தின் மாமாவாக நடித்ததால் அஜீத்தை  மரியாதை இல்லாமல் வாடா…போடா… என்ற பேசியுள்ளார். ஷூட்டிங் முடிந்த பின்னும் வடிவேலு வாடா போடா என பேசி விளையாடி கிண்டல் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும், அது இருவருக்குள்ளும் ஈகோ மோதலாக மாறியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் மட்டுமின்றி, மற்ற சமயங்களிலும் வடிவேலு அஜித்தை ‘வாடா’ மற்றும் போடா’ என்று அழைத்ததால் முகம் சுளித்து போன அஜித், இயக்குனரை அழைத்து இவ்வாறு சொல்ல வேண்டாம் என அவரிடம் சொல்லுங்க என்று எடுத்து கூறிஉள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குனர் வடிவேலுவிடம் பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், தன்னை மாற்றிக் கொள்ளாத வடிவேலு, அஜித்துடன் அதையே போக்கில் தொடர்ந்துள்ளார். இந்நிலையில், படப்பிப்பு முடியும் வரை காத்திருந்த அஜித், இந்த படத்தை தொடர்ந்து வேற எந்த இயக்குனர் கதை சொல்ல வந்தாலும், படத்தில் வடிவேலு கதாபாத்திரம் இருந்தால்? அவரா என கூறிவிட்டு அந்த படத்தில் நடிக்க மறுத்து விடுவாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
4 indian cardinals
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai