ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட், ஏர்ஏசியா புதிய விமானங்களை வாங்க முடிவு!

Default Image

ஏர்ஏசியா,ஜெட் ஏர்வேஸ்,ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வழித்தடங்களில் இயக்குவதற்காகப் புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை  இருந்ததைவிட இந்த ஆண்டில் 18விழுக்காடு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய் எண்பது டாலருக்குள் தொடர்ந்து இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்து அடுத்த இருபது ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15விழுக்காடு அளவில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜெட் ஏர்வேஸ் கடந்த ஆண்டு 75 போயிங் 737வகை விமானங்களை வாங்க உடன்பாடு செய்த நிலையில் இப்போது மேலும் 75விமானங்களை வாங்கப் பேச்சு நடத்தி வருகிறது. இதேபோல் இப்போது 14விமானங்களை வைத்துள்ள ஏர்ஏசியா நிறுவனமும் அடுத்த ஐந்தாண்டுகளில் எண்ணிக்கையை  60விமானங்களாக உயர்த்திக் கொள்ள முடிவெடுத்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் வரும் ஜூலை மாதம் மேலும் 40 போயிங் 737வகை விமானங்களை வாங்க உடன்பாடு செய்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்