உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி ஆதங்கம். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பாதி பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற வேதனை இருக்கும். உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான். காரணம் உழைத்தவர்களுக்கு சீட் இல்லை, உழைக்காதவர்கள் பதவிக்கு வந்திருப்பது வேதனையாகத்தான் இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவர். கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள். திமுகவுக்கு விசுவாசமாக இருந்தால் நிச்சயம் […]
அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி. அரசியலில் அநாகரீகமான வார்த்தைகளை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்துகிறார், அரசியலில் பண்பாடு வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அரசியல் பண்பாடு கருதி நாங்கள் அவ்வாறு பேசமாட்டோம். பதவி பெறுவதற்காக அதிமுகவை பற்றி அவர் விமர்சிக்கிறார். முதல்வர் ஸ்டாலினை திருப்தி படுத்தி பதவி பெற நினைக்கிறார். […]
திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, குற்றசாட்டுகளை நிரூபித்து காட்டுவோம் என ஆர்எஸ் பாரதி பேட்டி. எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் ஈபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]
திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து. திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி […]
எல்.முருகன் தனது போக்கை திருத்தி கொள்ளாவிட்டால் திமுக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை. தேவையில்லாமல் திமுகவை வீண் வம்புக்கு இழுக்கவேண்டாம் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பொறுப்பான பதிவில் உள்ள எல் முருகன் பொறுப்பற்ற முறையில் செய்தி வெளியிடுவது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. முரசொலி நிலம் பற்றிய அவதூறு பேச்சுக்காக வரும் 22ம் தேதி எல் முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆர்எஸ் பாரதி கண்டனம். விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதும் துபாய்க்குத் தனியே செல்லவில்லை. அவருடன் ஒரு பட்டாளமே சென்றுள்ளது. முதல்வரின் துபாய் பயணத்தையொட்டி, ரூ.5 ஆயிரம் கோடி அங்கு பறந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. துபாயில் நடைபெறும் விழாவில் தமிழகம் சார்பிலான அரங்கைத் திறந்து வைக்க எதற்கு அவ்வளவு […]
ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார். அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆளும்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் அந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலும் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆன்லைன் மூலம் பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே […]
ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதியிடம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு திமுக தான் காரணம் என முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருவதை குறித்த கேள்விக்கு, ஜெயலலிதா மரணத்திற்கு திமுக போட்ட வழக்கு தான் காரணம் என்பது திட்டமிட்ட பொய் என கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் திமுக மேல்முறையீடு செய்யவில்லை […]
திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வழங்க அனுமதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்பு […]
ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி சதீஷ்குமார். ஆர்.எஸ்.பாரதி திமுக-வின் அமைப்பு செயலாளராக உள்ளார். இவர் பட்டியல் இன மக்களை அவமதித்ததாக கூறி வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததை அடுத்து, ஆர்.எஸ்.பாரதி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த […]
முக ஸ்டாலின் குறித்து பொய்யாக பேசிய முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை நேற்று முன்தினம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசும்போது, உண்மை பேசுவதற்கு பதிலாக ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில […]
காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் ஒப்புதல் […]
துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவை ரஜினி வாழ்த்தியதால் திமுகவுக்கு எந்தவரவும் வரப்போவதில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்த க.அன்பழகன் மறைவையடுத்து, திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இரு பதவியும் காலியானது. இதனிடையே, கொரோனா பரவல் […]
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திமுக அமைப்பு […]
திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. அதேபோல் திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில், திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளார். அதில், ஊழல், ரவுடித்தனம், கொடநாடு சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை, கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களை காப்பாற்றுவது […]
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் […]
ஆர்.எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து பேசிய கருத்துக்கு அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆர்.எஸ.பாரதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை […]