பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கு இதுதான் காரணம்!

Default Image

ஒரு நாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முதலில் 2015இல் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் மோதின.
இந்த பகலிரவு ஆட்டங்கள் தொடங்கி நான்கு ஆண்டுகளாக 11 போட்டிகள் நடைபெற்று உள்ளன. நான்கு ஆண்டுகள் கழித்து 12வது பகலிரவு போட்டியாக இந்திய அணியும், வங்கதேச அணியும் வரும் 22ஆம் தேதி மோத உள்ளன.
இந்த பகலிரவு ஆட்டங்கள் நடைபெற முக்கிய கரணம் கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகளுக்கான ஆர்வம் குறைந்து வருவதுதான். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மதியம் அல்லது சாயங்காலம் தொடங்கி நடைபெறுவதால், ரசிகர்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு மேட்ச் பார்க்க ஆரம்பிக்கின்றனர். மேலும், மைதானத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வருகின்றனர்.
ஆனால், டெஸ்ட் போட்டி காலை முதல் மாலை அலுவலக நேரத்தில் நடைபெறுவதால் மைதானத்துக்கு அதிக ரசிகர்கள் வருவதில்லை,  டிவியிலும் அதிகம் பேர் டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளை மதியம் தொடங்கி, இரவு வரை நடத்த கிரிக்கெட் நிர்வாகங்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றன. இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்திற்கு பதிலாக பிங்க் நிறம் கொண்ட பந்துகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்