சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் முன் பதிவு கடந்த மார்ச் 19-ஆம் தேதி காலை தொடங்கிய நிலையில், விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன. டிக்கெட்டின் விலை ரூ.1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த போதிலும் வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆனது. […]
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 23இல் மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் போட்டி முடிந்து திரும்பும் பயணிகளுக்காக மெட்ரோ கூடுதல் நேரம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவித்துள்ளது. […]
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 2025 இன் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 241 ரன்களை சேர்த்தது. இதையடுத்து 242 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா கிட்டத்தட்ட அரையிறுதிக்கு வந்து விட்டது. இப்போது அது […]
துபாய் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வருவதால், ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய அணி துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் இருந்து இரு தினங்களுக்கு முன் அபுதாபி புறப்பட்ட இந்திய அணி, துபாயில் தரையிறங்கிய பிறகு ஓய்வை தவிர்த்துவிட்டு உடனடியாக பயிற்சியில் களமிறங்கியது. சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு எதையும் விட்டுவிடக்கூடாது […]
இங்கிலாந்து : இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து அணி கடும் தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அணியில் பயிற்சி சரியாக இல்லை அது தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்கள் குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் பேசியிருக்கிறார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் எங்களுடைய அணியில் காயங்களால் பாதிக்கப்பட்ட சில […]
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து […]
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது. இதில், பாகிஸ்தானைத் தவிர, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் முத்தரப்பு தொடரில் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தனை வீழ்த்திய நியூசிலாந்து அணி, இன்று தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்தத் தொடரின் கடைசிப் போட்டி பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இது […]
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுமையாக உடல் தகுதி பெற வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரிய அடியை எதிர்கொள்ளும். அணியின் துணைத் தலைவர் மிட்செல் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக […]
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ஷிவம் துபேஒரு புதுவித சாதனையைப் படைத்துள்ளார்.அது என்னவென்றால், இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் ஷிவம் தூபே. இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 […]
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 247 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிலும் நேற்றைய ஆட்டத்தில் குறிப்பாக, […]
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா – […]
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் வெற்றியில் கோங்காடி த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார். அட ஆமாங்க… மகளிர் U19 டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா அணியின் கொங்காடி த்ரிஷா, ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி […]
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ம் தேதி முதல் தொடங்கியது. இந்திய பெண்கள் அணி மேற்கிந்திய தீவுகள் (9 விக்கெட்கள்), மலேசியா (10 விக்கெட்கள்), இலங்கை (60 ரன்கள்), வங்கதேசம் (8 விக்கெட்கள்), ஸ்காட்லாந்து (150 ரன்கள்), இங்கிலாந்து (9 விக்கெட்கள்) ஆகியவற்றை அரையிறுதியில் தோற்கடித்தது. இந்த வெற்றிக்கு […]
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் 20 ஓவர்களின் முடிவில் 82 ரண்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் மதியம் 12மணி அளவில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ரன் குவிக்க முடியாமல் திணறல். 20 ஓவர்கள் […]
மும்பை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை […]
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி லேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நடப்பு சாம்பியன் இந்திய அணி எதிர்கொள்கிறது. முன்னதாக, அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 9 […]
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் ‘க்ளீன் பவுல்டு’ ஆனார். விராட் கோலி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப்பின் ரஞ்சி கோப்பை எலைட் பிரிவில் கடைசி லீக்கில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிக்காக களமிறங்கினார். பெரும் ஆரவாரத்துடன் ரஞ்சியில் களமிறங்கிய விராட் கோலி, 6 ரன்களில் அவுட்டாகி இருக்கிறார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் அவர் கிளீன் பவுல்டாகி […]
புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னும் 2-1 என […]