தடுமாறும் இந்திய அணி வீரர்கள்.., 4வது டி20யில் மளமளவென சரியும் விக்கெட்டுகள்!

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

IND Vs ENG 4th t20

புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன.

இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற  டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இன்று சூர்யகுமார் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நான்காவது டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி ஆரம்பம் முதலே தொடர்ந்து தாங்கள் விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 1 ரன்னிலும்,  திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். சிவம் துபே 31 ரன்களும், ஹார்திக் பாண்டியா 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். தற்போது 14 ஓவர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 5 விக்கெட் இழந்து 110 ரன்கள் மட்டுமே உள்ளது இந்திய அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan