கரும்பு விவசாயிகளுக்கு ரூ.150 கோடி உற்பத்தி மற்றும் ஊக்கத்தொகை – வழங்கிய முதல்வர்!

Rs 150 crore production and incentives for sugarcane farmers - Chief Minister stalin!

சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.

சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் இ-வாடகை ஆன்லைன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர்,வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.

மேலும்,பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பில் “நீடித்த  நிலையான பருத்தி இயக்கம்” என்ற திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.