காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘ என் வாழ்நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாகவும்’ அதில் குறிப்பிட்டுள்ளார். துரதிஷ்டவசமாக அந்த ட்வீட் பதிவிட்ட நான்கு மணி நேரத்திற்குள்ளாகவே இயற்கை எய்தினார் சுஷ்மா சுவராஜ்.
unknown nodeஇந்திரா காந்திக்கு பின்னர் இரண்டாவது பெண் வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கடந்த வருடம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை கொண்டார். அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது திடீர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.