நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள் – சபாநாயகரிடம் ஆளுநர் வேண்டுகோள்

கர்நாடகா சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் களோபரமாக நடந்து வருகிறது.  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அவையில் பேச்சுவார்த்தை

கர்நாடகா சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் களோபரமாக நடந்து வருகிறது.  இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் அவையில் பேச்சுவார்த்தை மட்டும் நடைபெற்றதால் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இது குறித்து ஆளுநரிடம் புகார் தெரிவித்தனர். அதில், ‘ சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், சபாநாயகர் நேரம் கடத்துவதையே குறியாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ஆளுநர், சபாநாயகருக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கடிதத்தை சட்டசபைபையில் சபாநாயகர் வாசிக்க முற்படுகையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.