ஈரானின் ‘கலாச்சார காவல்துறை’ மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா.!

Default Image

ஈரானில் ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகளை மக்கள் அனைவரும் தவறாமல் கடைபிடிக்கிறார்களா என கண்காணிக்கும் ‘கலாச்சார காவல்துறை’ மீது அமெரிக்கா பொருளாதார தடையை அறிவித்ததுள்ளது.

சமீபத்தில் செப் 15 ஆம் தேதி ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் ஹிஜாப் அணிவது குறித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் போராட்டடங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த போராட்டங்களில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 க்கும் அதிகமான காவல் துறையினர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்