ஈரான் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருப்பது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பதற்றத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஈரான் […]
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின்படி, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் தொடங்கிய இந்த தாக்குதல்கள், செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பை குறிவைத்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படையைப் பயன்படுத்தி, ஹவுதிகளின் ரேடார்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தளங்கள் அழிக்கப்பட்டன. சனா, […]
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் நட்புறவு என்பதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா , அமெரிக்க மக்களின் நலன், அமெரிக்காவே உலக நாடுகளின் தலைமை என்ற விதத்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் உடன்.., முன்னதாக உக்ரைன் நாட்டுடன் கனிம வள ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி , உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடனான பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி அதில் உடன்பாடு இல்லாமல் ட்ரம்ப் […]
தெஹ்ரான் : ஈரானில், 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டமானது கடந்த வருடம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே, ஈரானில் ஒரு ஆண்டில் மட்டும் 15 வயதுக்கு குறைவான சுமார் 1.84 லட்சம் சிறுமிகளுக்கு திருமணம் நடந்து வருகிறது. அதே போல, அந்த நாட்டில் 10 வயதுக்கு உட்பட்ட நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. மேலும், […]
தெஹ்ரான் : ஈரானின் தலைநகரான தெஹ்ரான் பகுதியில், கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிக்கும் தளங்களை என ஈரான் ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த காசா-இஸ்ரேல் போரில், ஆதரவாக ஹிஸ்புல்லாக்களும், ஹமாஸ் அமைப்பும் களமிறங்கியது. இந்த விளைவாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய […]
இஸ்ரேல் : ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இந்த தாக்குதலில் 4 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், “இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐநா விதிகளுக்கு எதிரானது. ஈரானுக்கு தங்களை தற்காத்துக் கொள்வதற்கான உரிமையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க […]
அமெரிக்கா : ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் அணு உலைகள், எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு, இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 1 தேதி நடந்த தாக்குதலுக்கு தற்காப்பாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரானின் இராணுவ […]
இஸ்ரல் : ஈரானின் “இராணுவ இலக்குகள்” மீது, இன்று (அக்டோபர் 26) அதிகாலையே துல்லியமான வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அதன்படி, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அக்டோபர் 2 ஆம் தேதி ஹெஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம், டெல் அவிவ் நகரங்கள் மீது, 200 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி […]
இஸ்ரேல் :இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில், இந்த போர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி ஒருவருக்கொருவர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாடுகளிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு இந்த சூழலில், ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா, உள்ளிட்ட சில […]
டெல் அவிவ் : கடந்த ஒருவருடமாக ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து ஒரு புறம் காசா மறுபுறம் ஹமாஸ் மற்றும் மறுபுறம் ஹிஸ்புல்லா என மும்முனை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. அதில், நாளுக்கு நாள் இஸ்ரேல் தரைவழியாகவும் வான்வழியாகவும் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருகிறது. இப்படி போர் நடைபெற்று வரும் வேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை அடியோடு ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்தது. அதன் விளைவாக, ஹிஸ்புல்லா […]
இஸ்ரேல் : ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வருடம் ஹமாஸ், இஸ்ரேலின் மக்கள் சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். அதன்பின், போர் நிறுத்த அடிப்படையில் சிலரை ஹமாஸ் விடுவித்தாலும், மீதம் உள்ள பணயக்கைதிகளை மீட்கும் போராட்டத்தில் இஸ்ரேல் தற்போது இருந்து வருகிறது. இப்படி தொடங்கிய இந்த தாக்குதல், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான தாக்குதலாக மாறி இருக்கிறது. நேற்றுடன் (அக்-7) இந்த தாக்குதல் தொடங்கி ஒரு வருடம் […]
ஹைஃபா : கடந்த 2023-ம் ஆண்டு இதே நாளில் (அக்-7) ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதலை மேற்கொண்டனர். அதில், பலரையும் பணயக்கைதிகளாக பிடித்தும் சென்றனர், அவர்களை மீட்கும் பணியிலே தற்போது வரை ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா மீது காசா பகுதியில் இஸ்ரேல் சண்டையிட்டு வருகிறது. இந்த தாக்குதல் தொடங்கி 1 வருடம் இன்றுடன் நிறைவடைந்த இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் ஒருமுனையில் நடைபெற்று வந்த போது மறுமுனையில் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலை தாக்கினார்கள். […]
லெபனான் : கடந்த அக்-7 2023-ம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நுழைந்து கொடூர தாக்குதலை நடத்தினார்கள். அதில், ஆயிரக்கணக்கானோரை கொன்றதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து சென்றது. இதற்கு எதிர் தாக்குதல் நடத்துவதற்காக இஸ்ரேல், காசா மீது போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், போர் நிறுத்த அடிப்படையில் இஸ்ரேல் சிலரை மீட்டது. ஆனால், மீதம் உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் ஈடுபட்டு, தாக்குதலை தொடர்ந்து வருகிறது. மேலும், […]
கர்பல்லா : 1 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் மரணம் நிச்சயம் என எச்சரிக்கும் வகையில் ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கூறியுள்ளார். கடந்த செப்-27ம் தேதி இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து நடத்திய வான்வெளி […]
லெபனான் : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈரான் நாட்டின் பங்கு என்பது பெரிதளவு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள கச்சா எண்ணெய் கிடங்குகளையும் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டோடு எண்ணெய் தொடர்பாக இறக்குமதி செய்யும் நாடுகளில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறுகிறார்கள். அதிலும், குறிப்பாக பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது, விலை […]
லெபனான் : ஒரு வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தரப்பிலிருந்து இதற்குப் பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை கொடுத்திருந்தது. அதன்பிறகு, முதலில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை நடத்தியது. பின், அடுத்ததாகத் தரைவழி தாக்குதலையும் நடத்தித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த போரில் , […]
லெபனான் : இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்துக்கட்ட போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலிய தலைவர்களைத் தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தீவிரமானத் தொடர் தாக்குதலை நிறுத்தாமல் நடத்தி வருகிறது. இதனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நேற்று முன்தினம் […]
லெபனான் : நேற்று முன்தினம் இரான், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்போம் என தெரிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. முன்னதாக வான்வெளி தாக்குதலை தொடர்ந்த நிலையில், அடுத்ததாக தரைவழி தாக்குதலையும் தொடர்ந்தது. தற்போது, ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து தரைவழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதில், மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் […]
லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளால் (Iran ballistic missile) தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலால், இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுப்போம் என அறிவித்திருந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேலின் ராணுவத் தளபதியும் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார்கள். அதில், முக்கிய விஷயமாக ஈரான் தவறு செய்து விட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு கண்டிப்பாக எதிர்த்தாக்குதல் செய்வோம் […]
லெபனான் : கடந்த ஒரு வருடமாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமான் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இணைந்து இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் இதற்கு பதிலடியாக இஸ்ரேலை […]