தமிழகத்தில் 3.62 கோடி ஆதார் இணைப்பு ஓவர்… தேர்தல் ஆணையம் தகவல்.!

Default Image

தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. – தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு.

இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இரட்டை வாக்குரிமை, இறந்துபோனவர்களுக்கு வாக்குரிமை என பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு விவரம் குறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு கூறுகையில், தமிழகத்தில் 58 விழுக்காடு வாக்காளர்கள் வாக்காளர் அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்க கோரியுள்ளனர். இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்குள் தமிழகத்தில் வாக்காளர் அடையாள எண் – ஆதார் இணைப்பு பணிகள் முழுதாக நிறைவு பெரும் எனவும் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்