‘தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்டவர்’- விஜயகாந்த் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்!

vijayakanth - O. Panneerselvam

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் அவதியுற்ற விஜயகாந்திற்கு இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

தற்போது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், ரசிகர்கள், சக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவிற்கும் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.! அரசு மரியாதை அறிவிப்பு.!

இது குறித்து  x பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்த அன்புச் சகோதரரின் மறைவால் மிகுந்த மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், சாதி, மத பேதமின்றி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், தொண்டர்களுக்கு ஓபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Kashmir Attack
Go tell this to Modi
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror