சிறுமி பாலியல் வன்கொடுமையில் இந்த 15 பேர் தான் குற்றவாளிகள் நீதிமன்றம் உத்தரவு.!

Default Image
  • சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது
  • சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது சுமார் 11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பரில் நிறைவு பெற்ற நிலையில், இன்று போக்ஷோ நீதிமன்ற நீதிபதிகள் மஞ்சுளா தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று உத்தரவிட்டார். இதில் தோட்டக்காரர் குணசேகரன் என்பவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக குடியிருப்பில் பணிசெய்த லிப்ட் ஆப்பரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாபு என்பவர் சிறையிலே உயிரிழந்து விட்ட நிலையில் மற்ற 16 பேருக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு என்ன தண்டனை என்பதை வரும் 3-ம் தேதி அறிவிக்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்