“அரசியல் தலைவர் படங்கள் இருக்க கூடாது” – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Default Image

கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ, சாதி ரீதியிலான அடையாளங்களோ இருக்கக்கூடாது மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக்கூடாது எனவும் கபடி போட்டி நடத்த அனுமதி கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

இதுபோன்று கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இதில், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் அரசியல் கட்சி அல்லது மதத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேனர் வைக்க கூடாது என்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்போர் குட்கா, மதுபானங்கள் உட்கொள்ளக்கூடாது எனவும் ஆணையிட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எந்த இடையூறும் ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் காலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்