ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரும் வழக்கு தொடர்பாக பதிலளிக்க உத்தரவு.

வன்னியர் இட ஒதுக்கீட்டில் (TRP-PG Assistant) ஆசிரியர் தகுதி தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையில், ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடரலாம், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது என மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர், ஆசிரியர் தகுதி தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் 87.17 மதிப்பெண் பெற்ற தன்னுடைய பெயர் தேர்வு செய்யப்படவில்லை என குப்புசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்.27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்