தமிழகம் 10 துறைகளில் முதலிடம்.! முதல்வர் பெருவிதம்.!

Default Image
  • சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது.
  • இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகம் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில் துறையை ஊக்குவிக்க பச்சை வகைப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், பல புதிய தொழில் திட்டங்கள் மூலம், தமிழகம், தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகித்து வருவதாகவும், வேளாண்மை, சமூகநலத்துறை, மனிதவள மேம்பாடு என 10 துறைகளில், தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்