திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும். தமிழகம் முழுவதும் வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 82,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1079 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புதுகோட்டை மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஊரக, நகராட்சி, பேரூராட்சி அமைப்பு […]
திருச்சி மன்னார்புரம் அரசு சுற்றுலா மாளிகையில் முதலமைச்சர் பழனிசாமியை விவசாய சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது காவிரி பாசன மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர், வரும் மார்ச் 7ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு கொடுத்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த, காவிரி பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன், தமிழக அரசின் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு, விவசாயிகளை பாதுகாக்கும் நடவடிக்கை என […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் அவர் வரும் வழியெங்கும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் வரும் 24-ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்கள். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் அவரை, பிரதமர் மோடி வரவேற்கிறார். இங்கிருந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். பிறகு மோட்டேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் […]
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகம் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில் துறையை ஊக்குவிக்க பச்சை […]
சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது, இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது. இதில் பல சிறப்பம்சங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து பேசிய […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்ம் ஒன்றில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் […]
இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக அனைத்து பகுதியிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடந்த தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பஞ்சாப் மாநில கலைஞர்களுடன் நடனமாடி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அசத்தினார். இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமைச்சர்கள் கலந்துகொண்டு […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா தலைமையில் நடைபெற்றது. தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்றிய அவர் திமுகவை பொருத்தமட்டில் அது ஒரு திருட்டு கட்சி, மக்களை ஏமாற்றும் கட்சி என்று விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா […]
மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார். ரஜினியின் துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், பல இடங்களில் மற்றும் அரசியல் வாதிகளிடையே பெரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். பின்னர் தந்தை பெரியார் கழகம் சார்பில் […]
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலகத் தமிழ்க்கவிதை மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக வெளியான தகவலுக்கு மாஃபா.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உலகத் தமிழ் கவிதை மாநாட்டின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்ட முடிவுகள் மொழி பெயர்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து கட்ட […]
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும் அதில் பங்கேற்று கொண்ட பிரபலங்கள் குறித்து செய்திகள் இன்னும் கசிந்து கொண்டே தான் இருக்கிறது. மற்ற இரண்டு சீசன்களில் முடிந்த இரண்டே நாளில் அதன் தாக்கம் குறைந்தது. ஆனால் மூன்றாவது சீசன் முடிந்து இரண்டு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் பிரபலங்களைப் பற்றிய சிறு தகவல் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் சண்டை போட்டு, […]
கேக் என்று கூறிய உடன் அனைவருக்கும் சாப்பிட தோன்றும். அந்த அளவுக்கு கேக் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு பொருளாக உள்ளது.எந்த நேரத்திலும் உன்னகூடிய ஒரு உணவாகவும் கேக் உள்ளது.மிகுந்த சுவை உடையதாக இருந்தாலும் அதில் சில தீமை தன்மைகளும் உள்ளன. உடல் பருமன் கேக்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள்உள்ளன. எனவே அதனை அதிகமாக உட்கொள்ளும் போது , உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, உடல் பருமனை அதிகரிகிறது. சர்கரையின் அளவு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை […]
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சக்கிலியன்கொடை கிராமத்தில் உள்ள வேட்டைக்கார சுவாமி கோயிலில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. வானவேடிக்கை நிகழ்ச்சிக்காக ஏராளமான அதிநவீன பட்டாசுகள் வாங்கி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன. கணேசன்,செல்வராஜ் இருவரும் பட்டாசுகளை வெடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வைத்திருந்த பெட்டிகள் மீது தீப்பொறி, விழுந்தன. இதனால் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின. இதில் கணேசன், செல்வராஜ் இருவரும் உடல் சிதறி பலியாகினர்.இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு […]
லால்குடி:கடந்த 13ம்தேதி லால்குடியை அடுத்த பெரியவர்சீலி அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய தேர்பெருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இயேசுவின் புதுமைகளான, தூய அன்பும் நட்பும், இறைவேண்டலில் தாழ்ச்சி, கடவுள் பிரிவு, பாவ மன்னிப்பும் நம்பிக்கையும், என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை தொடர்ந்து அன்னையின் ஆடம்பர சப்பரபவனி இரவு 10 மணிக்கு அடைக்கல நடைபெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு பெரிய தேர் வீதி உலா வந்தது. இதில் சுற்றுப்பகுதிளில் இருந்து அனைத்து பகுதி […]