கைதிகள் விடுதலை – தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

rn ravi

கைதிகள் விடுதலை தொடர்பான மனுக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கில் தமிழக அளுநர் ஆர்என் ரவி பதலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு கூறியதாவது, கைதிகள் விடுதலை தொடர்பான அரசு அனுப்பிய கோப்புகளின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பதிலடி!

மூன்று கைதிகள் தொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதன்பின், 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள 3 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் தற்போதைய நிலை என்ன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

3 சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோப்புகள் மீது எப்போது முடிவு எடுக்கப்படும்? என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி, பிப்ரவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்க ஆளுநருக்கு உத்தரவிடப்பட்டது. கைதிகள் மற்றும் உறவினர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்