சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையில் உலக காச நோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காச நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது புத்தகமான “ஒரு கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற நூலை ஆளுநரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்துவிட்டார். அவர் பேசுகையில், […]
சென்னை : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி நடிகர் அஜித், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது (ஜனவரி 26) இந்த விருதை அறிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டைச் […]
சென்னை : தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதப்படுத்துகிறார். ஆளுநர் திருத்தம் சொல்லி இரண்டாவது முறையாக அனுப்பப்படும் மசோதாவுக்கு கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அதனையும் வருடக்கணக்கில் கிடப்பில் போடுகிறார். இதனால் மசோதா காலாவதி பல்வேறு குற்றசாட்டுகளை ஆளுநர் ரவி மீது தமிழக அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி […]
சென்னை : இன்று (ஜனவரி 30) மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் மகாத்மா காந்தி சிலை/புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி வந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை எழும்பூரில் உள்ள காந்தி சிலைக்கு கிழே உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை குறிப்பிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை கிண்டி பூங்காவில் உள்ள […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது, அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் முதலில் அறிவித்ததை தொடர்ந்து, விசிக, இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இருப்பினும், இம்முறை கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், திமுக விருந்தில் பங்கேற்பது குறித்து […]
சென்னை : குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துக்கொள்ளாமல் புறக்கணிக்க உள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளது. வருகின்ற (ஜனவரி 26 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை குடியரசு நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் தண்டனைகளை மேலும் கடுமையாக மாற்றி தாக்கல் செய்யப்பட்ட இச்சட்ட மசோதா அன்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், […]
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி, நேற்று (11ம் தேதி) வரையில் நடைபெற்றது. முதல் நாளில், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அதிலும் குறிப்பாக, “சட்டப் பேரவைக்கு ஆளுநர் வருகிறார், ஆனால் உரையாற்றாமலே போய்விடுகிறார். அதனால்தான் அவரின் […]
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடன் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை. தேசிய கீதத்தை தமிழக அரசு தொடர்ந்து அவமதிக்கிறது என ஆளுநர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதே போல, தமிழக அரசு சார்பில் கூறுகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்படுவது மரபு என்றும், சட்டப்பேரவை முடியும் போது […]
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். இந்த, முறையும் அதற்கேற்றாற்போல, மாநில அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வசித்து கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார். முதலில், தான் தேசிய கீதம் […]
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ளார். திருவள்ளுவர், கவிஞர் கபீர் தாஸ், யோகி வேமனா ஆகியோர் பற்றி இந்த கருத்தரங்கில் பலர் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வுக்கான அழைப்பிதழிலில் தான், சர்ச்சை ஆரம்பமாகியுள்ளது. விழாவுக்கான அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு முனிவர் போன்று காவி உடை அணிவிட்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு பலர் விமர்சனம் செய்து […]
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத வழிபாடுகளை தொடங்கினர். இன்று விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து மண்டல பூஜை அல்லது மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வர் செல்வர். ஆளுநர் மாளிகையில், நடைபெறும் சர்வதேச கருத்தரங்கு நிகழ்வு ஒன்றிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போல அச்சடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]
சென்னை : நேற்று தூர்தர்சன் தமிழ் (பொதிகை) தொலைக்காட்சியின் பொன்விழா ஆண்டு சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மட்டும் நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனால், இந்த நிகழ்ச்சியுடன் சேர்த்தே ஹிந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழாவும் நடைபெரும் என அறிவிக்கப்பட்டதால் நேற்றைய நிகழ்ச்சி ஆரம்பமாகும் முன்னரே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எதிர்ப்பு என பல்வேறு எதிர்ப்புகளை இந்த நிகழ்ச்சி பெற்றுவிட்டது. ஹிந்தி மாதம் என்பது ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் கொண்டாடட்டும். […]
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பகுதியில் வீக்கம் இருந்தது.பின்னர் அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி , தமிழ்நாடு […]
சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். பிரதமர் மோடி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]
சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]
சென்னை : சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவின் நிலைபாடு என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் […]
சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், […]
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு திருத்த சட்டத்திற்கு ஆளுனர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மதுவிலக்கு திருத்த சட்டம் 1937இன் படி கள்ளச்சாராயம் காய்ச்சி அதனை விற்று, அதனால் உயிரிழப்புகள் ஏற்படின், குற்றம் சட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 3 லட்ச ரூபாய் வரையில் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் கடந்த சில மாதங்களில் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மதுவிலக்கு திருத்த சட்டத்தில் தமிழக அரசால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. சமீபத்தில் நடந்து […]
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை முன்னிறுத்தி நேற்றும் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது. இன்று தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் அதிமுக வெளியேற்றப்பட்டு ஒருநாள் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடையும் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பதாக கூறியிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தனர். அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]