புதருக்குள் மாணவியின் சடலம்.! துணியால் கால்கள் கட்டப்பட்டு கொடூரம்..வெளியான திடுக்கிடும் தகவல்.!

Default Image
  • திருச்சியில் நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
  • பின்னர் மதிக்குமார் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் காலணி இருந்ததை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.

அதைத்தொடர்ந்து உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அங்கு தேடியபோது புதருக்குள் மாணவி வாய், கால்கள் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து மாணவி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதிக்குமார் என்ற இளைஞரும், மாணவியும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், மாணவி வேறொருவருடன் பழகி வந்ததால் மதிக்குமார் கண்டித்துள்ளார். ஆனால் இதை மாணவி கேட்காததால், காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்