கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழிப் பேத்தியான டாக்டர் திவ்யபிரியா (வயது 28) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மே 22, 2025 அன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறு பத்தடி பாலம் அருகே நடந்தது. சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனது காரில் சென்று […]
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானைக்கு 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக, அந்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட […]
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், நான்கு குடும்பங்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்தவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தில் இருந்து பதினாறு […]
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து ஒன்று சாலையின் நடு எல்லையை தாண்டி எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில், சிறுவன், சிறுமி, வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து, பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மற்றும் ஒரு […]
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருந்து உண்ட சுமார் 27 பேருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில், மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழந்தார், இது தொடர்பாக, RTO, வட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், விருந்தில் வழங்கப்பட்ட உணவு […]
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரயில் மோதி இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த மமுகமது நஃபூல், சபீர் அகமது என தெரிய வந்துள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனையடுத்து, தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது, கவுண்டமணி மனைவி சாந்தியின் உடலுக்கு விஜய் நேரில் […]
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று, சட்டசபையில் இன்று, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கத்தோலிக்க […]
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் […]
வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் இன்று காலமானார். போப் காலமானார் என்ற செய்தியை வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், இருதரப்பு நிமோனியாவால் (double pneumonia) பாதிக்கப்பட்டு, ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். மார்ச் 23-ம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்தார். […]
உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய அந்த தொழிலாளர்கள் எல்லை சாலைகள் அமைப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட அவர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 46 […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி இருக்கையில், பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில், அதை அலட்சியமாக கையாளுகின்றது என்று கூறி, தமிழக […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது, அங்கிருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமான நிலையில், இதுவரை 6 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டின் துவக்கத்திம் முதல் வாரத்திலேயே நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பட்டாசு தொழிலாளர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து வேலைக்கு […]
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பைய நாயக்கன்பட்டியில் சாய்நாத் என்கிற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இன்று காலை வழக்கம் போல ஆலை இயங்கி வந்த நிலையில், மூலப்பொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசுகள் வெடி சிதறியதில் ஆலையில் இருந்த 4 அறைகள் முற்றிலும் தரைமட்டமாக வெடித்து சிதறியது. உடனடியாக சத்தம் கேட்டு […]
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. ஏற்கனவே, சிறுவனின் தாய் ரேவதி (35) உயிரிழந்த நிலையில், சிறுவன் தேஜூக்கு (9) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேஜ் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் தாய் ரேவதி உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, அல்லு அர்ஜுன் மீது […]
ஜார்ஜியா : நாட்டில் உள்ள மலை விடுதியான குடாரியில் உள்ள உணவகத்தில் 11 இந்தியர்கள் விஷவாய்ப்பு தாக்கி உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறந்தது இந்திய தூதரகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் உண்மையில் விஷய வாய்ப்பு தாக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்பது பற்றி ஜார்ஜியாவின் உள் விவகார அமைச்சகம் பரிசோதனை நடத்த தொடங்கியது. அப்போது உயிரிழந்தவர்களின் உடலில் காயங்கள் அல்லது வன்முறை எதுவும் நடந்த அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து உள்ளூர் ஊடகங்கள், போலீஸ் […]
சென்னை : பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததாக கூறப்பட்டு 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிநீரை அருந்திய அவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மையில் குடிநீரில் கழிவு நீர் கலந்துள்ளாதா? என்பது பற்றிய […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் முழுவதுமாக புயல் கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சில […]
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் கொடுத்த தேவையில்லாத சவால் தான் காரணம். ஏனென்றால், தீபாவளி பண்டிகை அன்று சபரீஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி வந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் ஆபத்தான முறையில் ஒரு சவாலைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மதுபோதையில் அவருடைய நண்பர்கள் பெரிய ரக பட்டாசு ஒன்றைக் கீழே வைத்துக்கொண்டு அதன்மீது கார்ட் போர்ட் […]
திருப்பதி : மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி ஒன்று தக்காளிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்கராப்பேட்டை மலை பாதையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் லாரி கார் மீது மோதியதால் கார் நொறுங்கவும் செய்தது. இதன் காரணமாக, காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உடல் நசுங்கி […]