தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் தென்னக ரயில்வே அதிரடி ..!

Default Image

நீலகிரியில் உள்ள மேட்டுப்பாளையம் முதல் உதகை  வரை கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மலைப்பகுதிகளில் நீராவி ரயில் இயங்கி வருகிறது.இந்த ரயிலில் பயணம் செய்ய 70 சதவீத சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் ரயில் மலையில்  செல்லும்போது பயணிகள் செல்பி எடுக்க முயற்சி செய்வதும் , நீராவி எஞ்சினில் நீர் நிரப்ப மலைப் பகுதியில் ரயில் நிறுத்தும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்து உள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஜன்னல் வழியாக வெளியே வந்து செல்பி எடுக்க முயன்றாலோ அல்லது ரயில் தண்டவாளத்தில் நின்று புகைப்படம் எடுக்க  முயற்சி செய்தாலோ ரூ.2000 அபராதம் என தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்