போராட்டத்தில் கலந்து கொள்வதே பெண்களை சைட் அடிக்கத்தான்.! ஒய்ஜி மகேந்திரன் கருத்து.!

Default Image
  • போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் 25% பேர் மட்டுமே அறிவுடன் போராடுவதாக நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
  • மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாதது எனவும், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

சென்னை போரூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் ஒய்ஜி மகேந்திரன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம், என்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். பல்படி சரியில்லை என்றால் கூட போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களை நடத்தி வள்ளுவரை சாகடிக்கின்றனர் என்று கூறினார்.

இந்நிலையில், தொடர்ந்து பேசிய அவர் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் 25% பேர் போராட்டம் குறித்து அறிவுடன் போராடுகின்றனர். மீதமுள்ள 75% பேர் விடுமுறை கிடைக்கும் எனவும், கலாட்டா செய்யவும் தான் போராடுகின்றனர். பிறகு பெண்களை சைட் அடிப்பதற்கும் போராட்டத்திற்கு செல்கின்றனர். மேலும் படிக்கும் மாணவர்களுக்கு இது தேவையில்லாதது எனவும், முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் எதாவது குறைகள் இருந்தால் அதை நியாயமான முறையில் கேட்க வேண்டும். கல் எறிவது , பேருந்துகளை எரிப்பது, கலவரம் உண்டாக்குவது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது என இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்