ஜன.2 முதல் ரூ.1000 ரொக்கம் – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!

Default Image

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியீடு.

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது.

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை ஜனவரி  2-ஆம் தேதி  சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1000 வழங்க 2, 356 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ள நிலையில், தமிழக அரசு ரூ.2,356.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜனவரி 2-ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் பணம் வழங்கப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்