போலி ஆவணங்களுக்கு அளித்த இழப்பீட்டை திரும்ப பெற உத்தரவு!

Default Image

முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

நிலம் கையகப்படுத்தப்பட்டதில் போலி நில ஆவணங்களை காண்பித்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டை திரும்ப பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டை திரும்ப பெறாவிடில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் போலி ஆவணங்கள் காண்பித்து இழப்பீடு பெற்றதாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. முறைகேடாக இழப்பீடு பெற்றவர்களிடம் இருந்து அதனை திரும்ப வசூலிக்க கோரி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சுமார் ரூ.20 கோடி முறைகேடாக பெற்ற இழப்பீடு அனைத்தையும் திரும்ப வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இழப்பீட்டை திரும்ப பெறாவிடில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ரூ.4 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது என சிபிசிஐடி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்