தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை (மார்ச் 19) பணிக்கு வர வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 18 முதல் நடைபெற இருப்பதால் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்/ ஆசிரியரல்லா பணியாளர்கள் அனைவரும் நாளை அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் என்றும் தேவைப்படும் தகவல்களை தாமதமின்றி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் மூலம் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node