தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் அதிமுக கழக செயலாளர் மற்றும் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு புதிய செயலாளராக அல்லது பொறுப்பாளராக யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
unknown nodeஇதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையான பேச்சுக்களால் பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது எழுந்த நிலையில், தற்போது அதிமுக கழக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.