சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் – அமைச்சர் ஐ.பெரியசாமி

Default Image

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சுய உதவி குழுக்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் உதவி வழங்கப்பட உள்ளது என்றும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும் கூறினார்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி கிராம சபை மற்றும் மாநகராட்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் திண்டுக்கல் மாநாகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டு மேற்கு மிருகநாதபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இவ்வாறு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்