பப்ஜி, ஃப்ரீ ஃபயர் விளையாட்டுகளுக்கு முடிவு கட்டியே தீருவோம் – உயர் நீதிமன்றம்

Default Image

ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர் என நீதிபதி வேதனை.

பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம். இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்று தெரிவித்த மதுரை கிளை நீதிபதிகள், விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் யூடியூப், கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தடையை மீறி பயன்படுத்தும் VPN தொழில்நுட்பத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதியளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர். இந்த விளையாட்டுகளை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்த விவரங்களை மத்திய,மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் நடவடிக்கைகளே அவர்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறையின் செயல்பாடு என்றும் இளைய சமுதாயத்தின் மீதான அக்கறை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் மீதான அக்கறை எனவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்