மறைந்தார் விஜயகாந்த்: சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதை – தமிழ்நாடு அரசு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் தொடங்கி 2.30 மணி நேரத்திற்கு மேலாக பயணித்து தேமுதிக அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக மேம்பாலங்கள், சாலைகள், வணிக வளாகங்கள், மொட்டை மாடி என அனைத்தில் இருந்தபடியும் மக்கள் கண்ணீர் சிந்தினர்.
மலர்களால் அலங்கரிக்கபட்ட ஊர்தியில் விஜயகாந்த் உடலை மனம் நொந்து அனுப்பி வைத்தனர். அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இப்பொது, குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்த் இறுதிச் சடங்கில் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவரது இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாரு ஒரு மாற்றுக் கட்சியை சார்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025