2021-22-ல் டாஸ்மாக் வருவாய் எவ்வளவு? – பேரவையில் அமைச்சர் கொடுத்த தகவல்!

Default Image

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக என்று சொல்லவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டிற்கான எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜி வாசித்தார்.  அதில், 2021-22-ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.36,013.14 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் கடந்தாண்டை விட நடப்பாண்டில் மார்ச் வரை ரூ.2,200 கோடி டாஸ்மாக் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கேள்வி நேரத்தின்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நிர்வாக குறைபாடுகளால் தான் மின் வெட்டு நிலவி வருவதாகவும், போதுமான அளவிற்கு நிலக்கரி கையிருப்பு வைத்து கொள்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு, 2021 திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும் என சொல்லவில்லை என்றும் போதுமான அளவு நிலக்கரியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குவதில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்