அதிகனமழை எச்சரிக்கை : நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்! 

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Red Alert

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த கனமழை அடுத்தடுத்த நாட்களிலும் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட தகவலின்படி, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல,  திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
RKFI -scamers
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya