தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை – இன்று மாலை அறிவிக்கிறார் சபாநாயகர் அப்பாவு!

Default Image

2022-23-ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் விரைவில் செய்யப்படவுள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க கடந்த 5-ஆம் தேதி(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கான வரைவு நிதிநிலை அறிக்கை ஏற்கெனவே தயாராகியுள்ள நிலையில், முதல்வர் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை வரைவு அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதலும் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதற்கான நிதிநிலை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் கூறப்பட்டது. நிதிநிலை அறிக்கை தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், அதனை தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை கூடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கலாகிறது ? இன்று மாலை சபாநாயகர் அப்பாவு அறிவிக்கவுள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்