விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாது – அமைச்சர் தங்கமணி

Default Image

விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது என்பதை முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தக்கல் முறையில் 5,000 விவசாய மின் இணைப்புகள் 6 மாத காலத்திற்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டிய பின் செய்தியலாளர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்