இட ஒதுக்கீடு அனைவருக்கும் தேவை, ஆனால் இதை செய்ய வேண்டும் – சீமான்

Default Image

தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில், தலைமை நீதிபதி மற்றும் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மற்ற 3 நீதிபதிகள் 10% இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தனர். பெரும்பான்மையான நீதிபதிகள் ஆதரவு தெரிவித்ததால் 10% இட ஒதுக்கீடு உறுதியானது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை பகிர்ந்த வருகின்றனர்.

அந்தவகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், அனைவருக்கும் இட ஒதுக்கீடு தேவை, ஆனால் அதற்கு முன் வகுப்புவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் திமுக, மாநில அரசு பணியிடங்களுக்கான தேர்வில் தனியார் நிறுவனங்களை கொண்டு வருவதை கேவலமாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்