பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை – நீதிமன்றம்

Default Image

ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

பிள்ளைகள் மீதான கடமை, பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் பேண செய்யும் ஆசிரியர்களை குறை சொல்ல கூடாது. ஆசிரியர்களை குறை சொன்னால் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்யமாட்டார்கள்.

எனவே, மாணவர்கள் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஆசிரியர்கள் மீது புகார் கூறுவதை தவிர்க்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டால் ஆதாரமின்றி ஆசிரியர் மீது குற்றச்சாட்டக்கூடாது என கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்