“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

TNGovt - mathiazhagan mla

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதிநாளான இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானியகோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, 3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”மக்கள்தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், 3வது குழந்தையை பெற்றுக்கொள்ள முன்வரும் பெற்றோருக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும்” என்றார்

எனவே, மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் பேசியிருந்த நிலையில், சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ பர்கூர் மதியழகன் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்