கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

kodaikanal - kutralam

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் முதல் 5 நாள்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து, சுற்றுலா செல்வோர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TNSDMA
TNSDMA [image – TNSDMA]
இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கன முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மறு உத்தரவுவரும்வரைதென்காசி மாவட்ட குற்றால அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது நேற்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிச் சிறுவன் உயிரிழந்த நிலையில், குற்றால அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குதடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்