தமிழகத்தில் கொரோனா பலி 10 ஆக உயர்வு..மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி.!

Default Image

தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 969 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 9,527 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 969 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் 485 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என்றும் 44,056 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் சிகிச்சை பெற்று வந்த 44 குணமடைந்துள்ளார்கள் என்றும் புதிதாக குணமடைந்தோர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்