சொன்னதை செய்து காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் – டெல்லி முதல்வர்

Default Image

பெண்கல்வியை மேம்படுத்தும் புதுமைப் பெண் திட்டம், ஒரு புரட்சிகர திட்டம் என திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பேச்சு.

சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுபோன்று, தமிழ்நாட்டில் 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் தொடங்கி வைத்தார்.

இதன்பின் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும். திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளது. ஆனால் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம். இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார். ஒரு மாநில முதலமைச்சர், இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை. ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பார்வையிட்டு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம். இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்