#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி,சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர்,நீலகிரி,கோவை,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி,சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சி, திருவள்ளூர், வேலூர்,திருப்பத்தூர்,நீலகிரி,கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஈரோடு, நாமக்கல்,சேலம்,தருமபுரி,கள்ளக்குறிச்சி, சிவகங்கை ராமநாதபுரம்,விருதுநகர் ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது pic.twitter.com/Fmlq4YvmE6
— TN SDMA (@tnsdma) June 18, 2022
மேலும்,தமிழக கடற்கரை,கொமோரின் பகுதி,மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மீனவர்கள் எச்சரிக்கை
தமிழக கடற்கரை, கொமோரின் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மேல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். pic.twitter.com/bMyremMUL4— TN SDMA (@tnsdma) June 18, 2022