#BREAKING: 143, 188, 341 என்ற பிரிவில் மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குப்பதிவு.!

Default Image
  • குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி காட்சிகள் சேர்ந்து நடைபெற்றது.
  • சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர்  திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் நேற்று பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பேரணியில் சட்டவிரோத கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மதிக்காதது, உள்ளிட்ட 143, 188, 341 என்ற பிரிவில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்