#BREAKING: தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் அறிவிப்பு

Default Image

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரைகளை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும், கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்