#BREAKING: கோடநாடு வழக்கு – சயானிடம் மீண்டும் விசாரணை!

Default Image

கோடநாடு வழக்கு தொடர்பாக சயானிடம் இரண்டாவது முறையாக தனிப்படை போலீசார் விசாரணை. 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டப்பட்டுள்ள சயானிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது இந்த வழக்கு தொடர்பாக தற்போது விசாரிக்கப்படும் சயான் என்பவர் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவ இவரிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கடந்தாண்டு உதகை காவல்துறை விசாரணை நடத்திய போது முதல் நபராக விசாரிக்கப்பட்டவர் சயான். அப்போது, சயானிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த சமயத்தில் மீண்டும் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 220 நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts